×

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிந்தது

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைவதால் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பான விசாரணை ஆவணங்கள், தகவல்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு அவர் சிறப்பு அதிகாரியாக பணியாற்றும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் சிறப்பு அதிகாரி பதவிக்காலம் நவம்பர் 30ம் தேதி முடிவடைந்துள்ளதால் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு இதுவரை சேகரித்துள்ள விசாரணை ஆவணங்கள், தகவல்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஐஜியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதினார். அதை பரிசீலித்த டிஜிபி சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலை அந்த பணியிலிருந்து விடுவித்து உரிய உத்தரவு பிறப்பிக்க அரசிடம் கோரினார். அதன் அடிப்படையில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி அரசாணையை வெளியிட்டுள்ளார்.

அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் நவம்பர் 30ம் தேதி முடிவடைவதால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்கள், தகவல்கள் உள்ளிட்ட அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியிடம் நவம்பர் 30ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மறுப்பு: தமிழக அரசால் சிலை தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல், அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் நீதிமன்றத்தால்தான் நியமிக்கப்பட்டேன். அதனால் என்னை நீக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது. அரசுக்கு கிடையாது என்று கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Bonni Manikwale ,Statue Trafficking Prevention Unit ,term , PON manikkavel
× RELATED “எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள்...