சென்னை: ஊரக பகுதிகளில் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டது. ஊரக பகுதிகளில் மின்னணு இயந்திரம் பயன்படுத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்திருந்தது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.