×

எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்: முதல்வர் பழனிசாமி அறிக்கை

சென்னை: எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதி ஏற்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். எய்ட்ஸ் நோயை தடுக்க தன்னார்வ ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தொற்றுள்ளோரை பரிவுடன் அரவணைத்து, சம உரிமை அளித்து, அவர்களது நம்பிக்கை வளர உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags : HIV / AIDS, Awareness, CM Palanisamy, Report
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...