பிஷ்னுபூர் : ஜார்கண்டில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் நக்சல்கள் பாலத்தை வெடி வைத்து தகர்த்தனர். பிஷ்னுபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் வாக்குப்பதிவு எவ்வித தடையும் இன்றி நடைபெறுவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.