தி.மலை : திருவண்ணாமலை கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார்(31) மீது ஆசிட் வீசப்பட்டது. படுகாயமடைந்த சிவக்குமார் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சு குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வி.ஏ.ஓ. சிவக்குமார் மீது காவலர் ஒருவர் ஆசிட் வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.