×

தேசிய வருவாய் வழித் தேர்வு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவிக்கான தேர்வு நாளை நடக்கிறது. 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் தேர்வு நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு நாளை நடக்க இருக்கிறது. இந்த தேர்வில் தமிழகத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 292 மாணவ,மாணவியர் எழுதுகின்றனர். 533 தேர்வு மையங்கள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தேர்வு இரண்டு கட்டமாக நடக்கும். மனத் திறன் தேர்வு (MAT) காலை 9.30 மணி முதல் 11 மணி வரை நடக்கும். படிப்பறித்வு தேர்வு (SAT) காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும்.

Tags : Exam
× RELATED 5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை...