திருவொற்றியூர்: ராயபுரம் பி.ஆர்.என் கார்டன் பகுதியை சேர்ந்தவன் பாலாஜி என்ற காக்கா தோப்பு பாலாஜி (40) பிரபல ரவுடியான இவன் மீது கல்மண்டபம், ராயபுரம், வண்ணாரப்பேட்டை போன்ற காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த 2006ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தான். இதையடுத்து திருவொற்றியூர் போலீசார் கடந்த மாதம் பாலாஜியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவன்மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் இவனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி பரிந்துரை செய்தார். அதன்பேரில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், பாலாஜியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், அவனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.