மேட்டுப்பாளையம் : கனமழை,மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் நாளை முதல் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை,மண்சரிவு காரணமாக கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. மழையால் தண்டவாளத்தில் பாறைகள் , மரங்கள் சாய்ந்து சேதமடைந்திருந்த ரயில்பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நாளை முதல் மலை ரயில் இயக்கப்படுகிறது.