சென்னை: டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய தடை கோரி ஐகோர்ட்டில் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அமமுகவை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்துடன் பிரமாணப்பதிரம் அளித்த 14 பேர் தற்போது கட்சியில் இல்லை. எனவே, பிரமாணப்பத்திரங்கள் அடிப்படையில் அமமுகவை பதிவு செய்யக் கூடாது என்று ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.