புதுடெல்லி: தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். பிரதமர் மோடியுடானான சந்திப்பிற்கு பின் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக மீனவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி இலங்கைக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.