மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவரின் தந்தை ரவிக்குமார் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிபிசிஐடி அலுவலகத்தில் ரவிக்குமார் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி தந்தை ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.