×

தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி நாளையுடன் ஓய்வு

சென்னை: தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி நாளையுடன் ஓய்வு பெறுகிறார். புதிய செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.தமிழக உள்துறைச் செயலாளராக நிரஞ்சன் மார்டி உள்ளார். இவர், 1959ம் ஆண்டு பிறந்தார். எம்பிபிஎஸ் முடித்துள்ளார். இவர், தமிழ், ஆங்கிலம், இந்தி, துளு, உருது ஆகிய மொழிகளில் சரளமாக பேசுவார். இவர், 1986ம் ஆண்டு ஐஏஎஸ்  பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராகவும், பல்வேறு துறைகளில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது பதவிக் காலம் நாளையுடன் முடிகிறது.இதனால் காலியாகும் உள்துறைச் செயலாளர் பதவியைப் பிடிக்க பல ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி எழுந்துள்ளது. அதில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் சாய்குமார் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.



Tags : Niranjan Marty ,Home Secretary ,Niranjan Marty Rest , Home Secretary ,Tamil Nadu, Niranjan Marty,
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...