சென்னை: டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கடலூர் டிஎஸ்பியாக இருந்த சாந்தி பெரம்பலூர் குற்றப்பிரிவுக்கும், கடலூர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக இருந்த காந்த், திருச்சி நகர சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராகவும், திருச்சி நகர சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராக இருந்த சுஜிதா தஞ்சாவூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த தர், திருச்சி ரயில்வே குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.