சென்னை : திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்த உத்தரவு ரத்து என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக வனபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டுறவு விதிகளை பின்பற்றாமல், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைவராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.