திருப்பூர் : திருப்பூர் கனரா வங்கியில் ரூ.3.5 கோடி மோசடி வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 7 பேருக்கு சிறை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2002ல் பனியன் நிறுவன தொழில் அதிபர் பாண்டியராஜ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து ரூ. 3.5 கோடி கடன் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. வங்கி முதன்மை மேலாளர் சங்கரதகுமார், தொழில் அதிபர் பாண்டியராஜ், அவரது மனைவி அனித்ரா உட்பட 7 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.