டெல்லி : முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு சென்று இன்றுடன் 100 நாட்கள் ஆகி விட்ட நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது, உச்ச நீதிமன்றம். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பு ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ப. சிதம்பரத்தை ஜாமீனில் விடுவித்தால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்று மத்திய அரசு வாதிடப்பட்டது.