டெல்லி : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து டெல்லியில் போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.இலங்கை அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இனப்படுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.