அரக்கோணம் : அரக்கோணத்தில் கருப்பு தினம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று புதிதாக உதயமாகும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரக்கோணம் முழுவதும் கருப்பு தினம் சுவரொட்டிகள் ஒட்டுப்பட்டுள்ளது., அரக்கோணத்தை தலைமையகமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்காததற்கு பொது மக்கள், வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.