நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாபநாசம், வி.கே.புரம், அம்பாசமுத்திரம் படித்துறையில் குளிக்கவோ, துணி துவைக்க வேண்டாம் என்று வட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தாமிரபரணியில் 1,400 கனஅடி வரை நீர்வரத்து இருக்கும் என்பதால் அம்பை வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.