×

இறந்த குட்டி யானை அருகில் நின்றபடி யாரையும் நெருங்க விடாத தாய் யானை: பந்தலூர் அருகே பாசப்போராட்டம்

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி நாயக்கன்சோலை சுப்ரமணியர் கோயில் அருகே வனப்பகுதியில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சேரம்பாடி ரேஞ்சர் பொறுப்பு கணேசன் உள்பட வனத்துறையினர் சென்றனர். இறந்த குட்டி யானை அருகே தாய் யானை நின்றிருந்தது அது வனத்துறையினரை அருகில் நெருங்க விடாமல் சத்தமிட்டு பிளிறியவாறு நின்றதால் வனத்துறையினர் அச்சமடைந்தனர்.  தொடர்ந்து வனத்துறையினர் இறந்த குட்டி யானையை கயிற்றில் கட்டி இழுத்து சாலையோரத்தில் வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தாய் யானை வனத்துறையினரை ஆக்ரோஷமாக விரட்டி தாக்க முயன்றது. இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து தப்பியுள்ளனர்.

அந்த ேநரத்தில் அந்த பகுதியில் நின்ற 2 வனத்துறை வாகனங்கள், 8 பைக்குகள் மற்றும் கோயிலை யானை உடைத்தது. சாலையில் நின்றவாறு யாரையும் குட்டி யானை அருகில் நெருங்க விடாமல் தடுத்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேரம்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Baby elephant, mother elephant, bandalur,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு;...