×

தொலைத்தொடர்பு துறையில் 3 ஆண்டுகளில் 41,000 கோடி இழப்பு

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் 41,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் குறைக்கப்பட்டன. இதனால் இத்துறையில் வருவாய் சரிந்து வந்துள்ளது கடந்த 2016-17 நிதியாண்டில் 2.65 லட்சம் கோடியாக இருந்த வருவாய், அடுத்த ஆண்டில் ₹2.46 லட்சம் கோடியாகவும். கடந்த நிதியாண்டில் 2.24 லட்சம் கோடியாகவும் சரிந்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த துறைக்கு  41,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ் என்எல் வருவாய் 2016-17 நிதியாண்டில் ₹11,271.95 கோடியாக இருந்தது 2018-19ல் ₹4,708.63 ேகாடியாக சரிந்தது என்றார்.



Tags : telecommunications, industry, years
× RELATED ஏப்-24: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை