சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியை சங்கீதா பள்ளியிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி அவதூறாக பேசியதாக கூறி பள்ளியில் இருந்த ரசாயனத்தை ஆசிரியை சங்கீதா குடித்துள்ளார். சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.