விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சிந்தாமணி அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி விஷ வண்டு கடித்து உயிரிழந்துள்ளார். விஷ வண்டு கடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டார். மாணவி விஷ்ணு பிரியாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.