×

கடற்கரையில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

தண்டையார்பேட்டை: காசிமேடு கடற்கரையில் தொப்புள் கொடியுடன் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். காசிமேடு துறைமுகம் பழைய வார்ப்பு கடற்கரையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை சடலம் கிடப்பதாக, மீன்பிடி துறைமுகம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை சடலமாக கிடப்பது தெரிந்தது.

சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தவறான வழியில் பிறந்ததால் குழந்தையை கொன்று கடலில் வீசினார்களா? அல்லது பிரசவத்தின்போது இறந்ததால் கடற்கரையில் வீசிவிட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : shore , Beach, baby girl, corpse rescue
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு