×

முதலிரவுக்கு வர மறுத்த கணவன் மனைவி புகாரால் 8 பேர் மீது வழக்கு

விருதுநகர்: முதலிரவுக்கு அழைத்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர், கட்டையாபுரம், ஆவலப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் (எ) சரவணன். இவருக்கும், திருநெல்வேலி, சத்திரத்தை சேர்ந்த பானுவுக்கும் (31, பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த ஜூன் 6ல் திருமணம் நடந்தது. அப்போது 11 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. திருமணம் முடிந்த நாளில் இருவருக்கும் முதலிரவு நடக்கவில்லை. அப்போது, மாமனார் மூக்காண்டி, மாமியார் சண்முகசுந்தரி, சரவணனின் சகோதரிகள் உள்ளிட்டோர் சேர்ந்து, ‘உனக்கும், சரவணனுக்கும் முதலிரவு நடக்காது’ என பானுவிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பானு, இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இதுதொடர்பாக மருமகன் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர்கள், ‘‘ஆண்டுக்கணக்கில் முதலிரவு நடக்காதவர்கள் இருக்கிறார்கள். இதை எப்படி பெற்றோரிடம் சொல்லலாம். உனது போட்டோவை கம்ப்யூட்டரில் தவறாக கிராபிக்ஸ் செய்து யூடியூப்பில் போட்டு விடுவோம்’’ என பானுவை மிரட்டினராம். மேலும், கணவர் சரவணன், மனைவியிடம், ‘‘எனது தந்தை மூக்காண்டிக்காகத்தான் உன்னை திருமணம் செய்தேன். வேண்டுமென்றால் அவருடன் உல்லாசமாக இருக்கலாம். என்னை தொந்தரவு செய்யக்கூடாது’’ என பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பானு புகார் செய்தார். போலீசார் சரவணன் உட்பட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : complainant , Swirling, husband, wife, 8 cases
× RELATED ஊழல் புகாருக்கு ஆளான ராகேஷ்...