×

மது போதையில் தூங்கியபோது விபரீதம் தண்ணீர் தொட்டியில் மூழ்கி எலக்ட்ரீசியன் பரிதாப பலி

சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், சண்முகா நகர், நேதாஜி தெருவில் தனியார் சார்பில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் முதல் மாடியில் நேற்று முன்தினம் எலக்ட்ரீசியன் பணிக்காக வந்த ரோகித் ஜெயபால் (27), செல்வம் மற்றும் ராபர்ட் உள்ளிட்ட தொழிலாளர்கள் இரவு பணி முடிந்ததும், மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறியதும் தொழிலாளர்கள் மூவரும் அங்கேயே படுத்து தூங்கினர். இரவு 12 மணியளவில் ரோகித் ஜெயபால் தூக்கத்தில் உருண்டு மாடியில் இருந்து கீழே இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்தார்.

இதில் மூச்சு திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று காலை சக தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது, ரோகித் ஜெயபால் தண்ணீரில் விழுந்து இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, ரோகித் ஜெயபால் தூக்கத்தில் உருண்டு விழுந்து இறந்தாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Electrician ,death ,alcohol Electrician , Alcohol addiction, sleeping, adultery, water tank, sink, electrician, pity
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு