சென்னை: மீத்தேன் ஆய்வுத் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுத்தியது காவிரிப் படுகை மக்களுக்கு கிடைத்த வெற்றி என தமிழக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நீர், சுற்றுசூழலை பாதுகாக்க போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளது. நிலவியல், அரசியல் எதிர்ப்பு காரணமாக ஓஎன்ஜிசியால் எண்ணெய் கிணறுகளை அமைக்க முடியவில்லை.