பெங்களூரு: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆய்வாளர் கோசலராம் தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். பெங்களூருவிலிருந்து கொண்டு வரப்படும் முருகனை நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார்.