×

அவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் செயல் என்னை புண்படுத்திவிட்டது: சபாநாயகர் ஓம்பிர்லா குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மையப்பகுதியை முற்றுகையிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களின் செயல் தன்னை புண்படுத்திவிட்டது என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜ தலைமையிலான ஆட்சி பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹைபி ஈடன் மற்றும் பிரதாபன் ஆகியோர் நேற்று மக்களவையில் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்ற வாசகம் பொருத்திய பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் இருவரும் பின்னர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்களின் செயல் என்னை புண்படுத்தியது. இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் பொறுத்துக் கொள்ளவும் முடியாது’’ என்றார்.

Tags : Congress ,Ombirla , The Congress member, the act, has offended me, Speaker Ompirla
× RELATED காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை...