சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு பேருந்து டயரின் நட்டுகள் கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கழன்றுவிழுந்த நட்டுகளை ஓட்டுநரும் நடத்துனரும் பொருத்திவிட்டு பேருந்தை இயக்கினர். பழுதான பேருந்து கடந்த ஆண்டு தான் அரசால் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என தெரிவித்தனர்.