×

இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க சட்ட முன்வரைவு: நாடாளுமன்றத்தில் வைகோ தாக்கல்

சென்னை: இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவை வைகோ தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சட்ட முன்வரைவு தாக்கல் செய்து பேசியதாவது:இந்திக்கு இணையாக, இந்தியாவின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும், இந்திய அரசியல் சட்டம் வழி வகுத்து இருக்கிறது. உலகின்  எத்தனையோ நாடுகளில், பல மொழிகள், ஆட்சிமொழிகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக, தெற்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில், 11 மொழிகள், ஆட்சிமொழிகளாக உள்ளன.

130 கோடி மக்கள் வசிக்கின்ற இந்தியாவில், 454 மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியா, பன்மொழிகள் பேசுகின்ற நாடு; பல்வேறு பழக்க வழக்கங்கள், பண்பாடுகளைக் கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு, இந்திய அரசியல்  சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியல் இடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் ஆதரித்து வளர்க்க வேண்டும்; இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழிகள் ஆக்க வேண்டும். அதற்காக, இந்தச் சட்ட முன் வரைவை நான் அறிமுகம் செய்கின்றேன்.

Tags : Vaiko Filing ,Parliament ,India ,Governments , Legislative , India , Governance, Vaiko ,Parliament
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...