சென்னை : அரசு அச்சகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் விண்ணப்பம் அச்சடிக்கும் பணி நடைபெறுகிறது.சென்னை தங்கசாலை தெருவில் அரசு அச்சகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இதில் மூன்று ஷிப்ட்களில் ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த அரசு அச்சகத்தில் தமிழக அரசின் கோப்புகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பாடபுத்தகங்கள், மாநகராட்சியின் டெண்டர் ஆவணங்கள் உள்பட பல முக்கிய ஆவணங்கள் அச்சடிக்கப்படுகிறது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
எனவே தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான விண்ணப்பங்கள் மற்றும் வாக்காளர் பெயர் பட்டியல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கி உள்ளது. அசம்பாவித சம்பவங்களோ குளறுபடியோ நடைபெறாமல் இருக்க 3 ஷிப்ட்களில் 10 பேர் வீதம் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.