×

குட்கா பதுக்கிய முதியவர் கைது

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் பகுதி வீட்டில் குட்கா தயாரிக்கப்பட்டு வடசென்னையில் வினியோகிக்கப்படுவதாக கொடுங்கையூர் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி கொடுங்கையூர் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியபோது ஆர்.ஆர்.நகர் பகுதியில் டில்லிபாபு என்பவரது வீட்டில் 10 பண்டல்கள் குட்கா தயாரிக்கும் மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை போலீசார் பறிமுதல் செய்து அப்பு என்ற பிரபாகரன் (50) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், ஆந்திராவில் இருந்து இந்த பொருட்களை கொண்டு வந்து இங்கு மாவா தயாரிப்பாளர்களுக்கு விற்று வந்ததாகவும் இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு எதுவும் தெரியாமல் இருக்க அதை அட்டை பெட்டிகளில் வைத்து துணி வியாபாரம் செய்வது போல இந்த வியாபாரத்தை செய்து வந்ததும் தெரிந்தது.

Tags : Old, man, arrested
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...