×

ஆறுமுகநேரியில் பழுதான சாலையை சீரமைக்ககோரி வாழைக்கன்று நட்டு நூதன போராட்டம்

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் மழையால் பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வாழைமரக்கன்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகிழக்கு பருவமழை காரணமாக ஆறுமுகநேரி பகுதியில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக ஆறுமுகநேரி-தூத்துக்குடி சாலை, ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம், காயல்பட்டணம் செல்லும் சாலை சந்திக்கும் 4 வழி சந்திப்பு பகுதியில் உள்ள சாலை, தொடர்மழை காரணமாக உருக்குலைந்து குண்டு குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தாலும் தற்காலிகமாக மண் நிரப்பி சாலையை சரி செய்து விடுகின்றனர். ஆனால் தொடர்மழை காரணமாக மீண்டும் சாலையில் குண்டுகுழி ஏற்படுவது தொடர் கதையாகிவிட்டது. இந்நிலையில் பழுதான சாலைகளை நிரந்தரமாக  சீரமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆறுமுகநேரியை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான தொண்டர் சுப்பிரமணியன் தலைமையில் அப்பகுதி மக்கள், இன்று காலை பழுதான சாலையில் வாழைக்கன்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

Tags : spam road , Arumuganeri, spam road
× RELATED பழுதான சாலையை சீரமைக்கக்கோரி கூடலூர்...