×

பாளை அருகே அரியகுளம் ஸ்ரீவரத விநாயகர் கோயிலில் திருவாசகம் பதிகம் நிகழ்ச்சி

நெல்லை: பாளை அருகே அரியகுளம் ஸ்ரீவரத விநாயகர் கோயிலில் திருவாசகம் பதிகம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாளை அருகே உள்ள அரியகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவரத விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தியன்று சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். மேலும் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்நிலையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அரியகுளம் கிராம மக்கள் சார்பில் திருவாசகம் பதிகம் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சிவநேரி சிவமன்றத்தினர் செய்திருந்தனர். வரும் டிசம்பர் 10ம்தேதி திருக்கார்த்திகையன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அரியகுளம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags : Thiruvasakam Padikam ,Ariyakulam Srivaratha Vinayagar Temple ,Palayi Ariyakulam Srivaratha Ganesha Temple , Palayam, Srivaratha Ganesha Temple, Thiruvasakam Padikam
× RELATED மேட்டுப்பாளையத்தில் இன்று காலை...