மேல்மருவத்தூர்: வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் இல்லாததால் 5 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் மேல்மருவத்தூர் ஏரியில் குவிந்துள்ளன. கூழை கடா, வெள்ளைநிற கொக்கு, சாம்பல்நிற கொக்கு, நீர்காகம் உள்பட 5 ஆயிரம் பறவைகள் மரங்களில் தங்கியுள்ளன. வேடந்தாங்கல் ஏரியை சுற்றி வீட்டு மனைகளாக மாற்றப்பட்டதால் பறவைகளுக்கு போதிய உணவு இல்லை.