×

அனைத்து மாவட்டங்களிலும் சைபர் கிரைம் காவல் நிலையங்கள்: டிஜிபி திரிபாதி தகவல்

சென்னை: வருங்காலத்தில் மாவட்ட வாரியாக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் தொடங்கப்படும் என்று டிஜிபி திரிபாதி தெரித்தார். தமிழகத்தில், ‘சைபர் கிரைம்’ எனப்படும் இணைய வழி குற்றங்களை தடுக்கவும், அதில் இருந்து தற்காத்து கொள்வது மற்றும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, காவல்துறை கூடுதல் டி.ஜி.பி., தலைமையில், ‘சைபர் அரங்கம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு, ரூ.3.70 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்நிலையில், தமிழக காவல் துறையும், சென்னை ஐ.ஐ.டி.,யும் இணைந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்தோருக்கு, ‘ஹேக்கத்தான்’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. மேலும், பெருகி வரும் இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து, போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 1,348 பேர் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களை பிடித்த குழுவினரை, பாராட்டி, டி.ஜி.பி., திரிபாதி பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், டி.ஜி.பி., திரிபாதி பேசியதாவது:தகவல் தொழில்நுட்பம் பெரிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்பத்தால் நன்மைகள் இருந்தாலும், நமக்கும், தேசிய பாதுக்காப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதற்காக, தமிழக அரசு ‘சைபர் அரங்கம்’ தொடங்கியுள்ளது. நிதி மோசடிகள் மற்றும் ஆன்லைன் மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வருங்காலங்களில், மாவட்ட வாரியாக, ‘சைபர் கிரைம்’ காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் ‘சைபர் கிரைம்’ குற்றங்கள் குறையும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : districts ,DGP Tripathi , Cybercrime , districts,: DGP Tripathi, information
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை