×

லாட்ஜில் அடைத்து வைத்து 2 மாணவிகள் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர்கள் கைது

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுமி ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன், பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் வீடு திரும்பவில்லை. பெற்றோர், இதுபற்றி பள்ளியில் விசாரித்தபோது இருவரும் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில்  அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கனகராஜ் (21), குமார் (19) ஆகிய இருவரும் 2 மாணவிகளிடமும் ஆசை வார்த்தை கூறி, திருப்பூருக்கு சுற்றுலா அழைத்து சென்றதும், அங்குள்ள லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.



Tags : lodge ,Auto drivers , lodged, 2 students ,raped, arrested
× RELATED உதகையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது..!!