×

16வது ஆண்டு நினைவு நாள் முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை: தமிழகம் முழுவதும் அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 16வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் திமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் 16வது ஆண்டு நினைவு நாள், தமிழகம் முழுவதும் திமுகவினரால் நேற்று அனுசரிக்கப்பட்டது.முரசொலி மாறன் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி மாறன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை முரசொலி மாறன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த திமுகவினர் கலைஞர் புகழ் வாழ்க... அண்ணா புகழ் வாழ்க.... முரசொலி மாறன் புகழ் வாழ்க... என்று கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து எம்பிக்கள் ஆ.ராசா, சண்முகம், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.திருக்குவளை: திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் முரசொலிமாறனின்  வெண்கல சிலைக்கு நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதிவாணன்,  தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் நகர திமுக அலுவலகம் முன்பு முரசொலி மாறன் படத்திற்கு மாவட்ட பொருளாளர் புகழேந்தி தலைமையில் பொன்முடி எம்எல்ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி: புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.பி., சி.பி.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ., தலைமை தாங்கி, முரசொலிமாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.சேலம்: சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில், கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், முரசொலி மாறனின் படத்திற்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பூலாவரி திமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறன் படத்திற்கு, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வேலூர்: வேலூர் அண்ணா சாலையில் உள்ள திமுக மாநகர அலுவலகத்தில் முரசொலி மாறன் படத்திற்கு வேலூர் எம்எல்ஏவும், மாநகர மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில், மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, மாநகர அவைத்தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர். வேலூர் மத்திய மாவட்டத்தில் முரசொலி மாறன் உருவப்படத்துக்கு வேலூர் எம்பி கதிர்ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags : 16th Anniversary ,Murasoli Maran Statue 16th Anniversary Commemoration MK Stalin ,Murasoli Maran ,idol ,Tamil Nadu , 16th Anniversary ,Commemoration, MK Stalin, Murasoli Maran, Tamil Nadu
× RELATED முரசொலி மாறனின் 23ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு