×

சுரண்டையில் கனமழையால் வீடு இழந்தவருக்கு திமுக நலத்திட்ட உதவி

சுரண்டை: சுரண்டையில் கனமழைக்கு வீட்டை இழந்தவருக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சுரண்டை பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மனைவி இசக்கியம்மாள். இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்றுமுன்தினம் இரவு இவரது வீடு இடிந்து விழுந்தது. கணவரை இழந்த இசக்கியம்மாள், தனது 3 பெண் குழந்தைகளையும் திருமணம் செய்து கொடுத்து தனியாக வசித்து வந்தார். தற்போது வீட்டை இழந்து செய்வதறியாது தவித்த இவருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், ஸ்டவ், மண்ணெண்ணெய், பெட்ஷீட், பாய் மற்றும் பண உதவியை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகச்சாமி, பொருளாளர் ஜெயராஜ், பூல்பாண்டியன், சந்திரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐயப்பன், ஒன்றிய பிரதிநிதி சசிகுமார், முன்னாள் கவுன்சிலர் அன்னப்பிரகாசம், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஜேம்ஸ், தகவல் தொழில்நுட்ப அணி கணேசன், தொழிலதிபர் அரவிந்த் சிதம்பரம், இசக்கிப்பாண்டியன், சண்முகையா, முன்னாள் இளைஞரணி சங்கரபாண்டியன், ஊராட்சி செயலாளர் சீனித்துரை, அய்யாக்குட்டி, மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திமுக ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் செய்திருந்தார்.


Tags : DMK , Exploit, welfare, homeless, DMK, welfare assistance
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...