×

இடைப்பாடி, கொங்கணாபுரத்தில் புதிதாக 52 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்: கட்டுமான பணிகள் துவக்கம்

இடைப்பாடி: இடைப்பாடி-இருப்பாளி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக, இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி, தாரமங்கலம், வீரபாண்டி, சேலத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களான பூலாம்பட்டி, இளம்பிள்ளை, இடங்கணசாலை, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட 4 பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் குடிநீர் செல்லாத பகுதிகளுக்கு, இடைப்பாடியில் 18, கொங்கணாபுரத்தில் 34 என மொத்தம் 52 புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். இடைப்பாடி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாதேஷ், உதவி நிர்வாக பொறியாளர் கல்யாணி, உதவி பொறியாளர்கள் சேகர், ரம்யா, ஒப்பந்ததாரர்கள் தனசேகரன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Konkanapuram ,Konkapuram Interstate , Interstate, Konkanapuram, New, 52 Overhead, Reservoir Tanks
× RELATED திமுக சார்பில் மகளிர் தின கோலப்போட்டி