×

காரில் ரகசியமாக கடத்திய 3 கோடி தங்கம் பறிமுதல்: கடப்பாவில் 3 பேர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பாவில் காருக்குள் ரகசிய அறை அமைத்து கடத்தி வந்த ₹3 கோடி மதிப்புள்ள தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவின் கடப்பாவில் டிஎஸ்பி சூரியநாராயணா தலைமையில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடப்பா நகரில் தனியார் நகைக்கடை நடத்தி வரும் பஜ்ரங் சேட் என்பவரது வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரின் பின் சீட்டில் ரகசிய அறை அமைத்து நெல்லூரில் இருந்து கடப்பாவிற்கு சுமார் 6 கிலோ 930 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர், காரில் வந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நெல்லூரில் இருந்து இதேபோன்று எந்தெந்த நகரங்களுக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது, எந்த முறையில் கடத்துகின்றனர் போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகையின் மதிப்பு 3 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், தங்க நகைகளை வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக  என டிஎஸ்பி சூரியநாராயணா தெரிவித்தார்.

Tags : persons ,Kadapa 3 , Smuggling, confiscation of gold, Kadapa
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...