சென்னை: சென்னை அயனாவரத்தில் சொத்துத் தகராறில் மாமியாரை கடத்திய மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். மாமியார் பத்மினியை சிறைவைத்து சித்ரவதை செய்து மீண்டும் அயனாவரத்தில் விட வந்தபோது மருமகள் மேகனா கைது செய்யப்பட்டுள்ளார். பத்மினியின் பெயரில் உள்ள ரூ.4 கோடி சொத்துக்களை தன் பெயரில் மாற்றி எழுதித்தர வைக்க கடத்தலில் ஈடுபட்டதாக மேனகா தகவல் அளித்ததை தொடரந்து போலீஸ் கைது செய்தது.