ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றுக்குள் வைக்கப்பட்ட ஊசி கவன குறைவால் நடந்துள்ளது. ஆரம்ப சுகாதாரநிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். அறுவை சிகிச்சை செய்து ஊசியை வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.