சென்னை: சென்னையில் இன்று (21-11-2019) வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை மாநகர் முழுவதும் அதிகாலை முதல் கனமழை செய்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.