×

திருவொற்றியூரில் 27 டன் பிரியாணி அரிசி லாரியுடன் கடத்தல்: டிரைவருக்கு வலை

திருவொற்றியூர்:  திருவொற்றியூரில் 27 டன் பிரியாணி அரிசியுடன் லாரியை கடத்தி சென்ற லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.   திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). லாரி உரிமையாளர். இவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் திருவொற்றியூர் கரிமேடு தெரு அருகே உள்ள கான்கார்ட் மத்திய அரசு சேமிப்பு கிடங்கிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட 27 டன் எடை கொண்ட 1080  பிரியாணி  அரிசி மூட்டைகளை  ஏற்றி பூந்தமல்லியில் உள்ள ஒரு மொத்த வியாபார கடைக்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் நிறுத்தக்பட்டு இருந்தது.  

அப்போது லாரி உரிமையாளரிடம் எந்த தகவலும் சொல்லாமல் லாரி டிரைவர் கே.கே.சாமி என்பவர் லாரியை  திடீரென்று ஓட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர் மாரிமுத்து பல இடங்களில் தேடியும் லாரியையும், டிரைவர் கே.கே.சாமியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.  இதையடுத்து  காணாமல் போன லாரியை கண்டுபிடித்து தரும்படி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் மாரிமுத்து புகார் செய்தார். திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன டிரைவரையும் லாரியையும் தேடி வருகின்றனர்.   



Tags : Thiruvottiyur , Thiruvottiyur, biryani rice, smuggling
× RELATED தீக்குளித்த பெண் சாவு கணவன் காயம்