திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பரணம்பேடு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 10 சவரன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களுக்கு கவரைப்பேட்டை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர். பரணம்பேட்டில் இரவு நேரத்தில் ரோந்து பணியை போலீஸ் தீவிரப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.