×

மகாராஷ்டிரா கிராமத்தில் நண்பரின் பிறந்தநாளை மயானத்தில் கொண்டாடிய இளைஞர்கள்

நாசிக்: மகாராஷ்டிராவின் நிபாட் தாலுகாவில் உள்ள சந்தோரி கிராமத்தில் வசித்து வருபவர் சோம்நாத் கோத்மே (25). இவருடைய 25வது பிறந்த நாளை கிராமத்தில் உள்ள மயானத்தில் கொண்டாட அவருடைய நண்பர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சுடுகாட்டுக்கு சென்று நண்பரின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடியதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். பிறந்த நாளையொட்டி மயானத்திலேயே அவர்கள் கேக் வெட்டியதாகவும் அப்போது நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும் அவர்கள் கூறினர். தனது பிறந்தநாளை சுடுகாட்டில் கொண்டாடியது குறித்து சோம்நாத் கோத்மே மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தனர். மயானம் என்பது பொதுவாக ஒரு அமங்கலமான இடமாகவே கருதப்படுகிறது. ஆனால் மயானம் குறித்து சமூகத்தில் நிலவும் பல்வேறு மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் வகையிலேயே இப்படி செய்ததாக சோம்நாத் கோத்மே கூறினார்.




Tags : birthday ,village ,Maharashtra , Maharashtra, youth
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...