புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்க திமுக எம்எல்ஏக்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதனுக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி, மாவட்ட நிர்வாகம் மற்றும் கலெக்டரை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வக்கீல் சேக்திவான் புகாரின்படி புதுக்கோட்டை டவுன் போலீசார், எம்எல்ஏ ரகுபதி மீது வழக்கு பதிந்துள்ளனர்.