சென்னை:சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் அமைப்பின் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விமன் அமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவர் மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் நஸீரா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரசூல் பாத்திமா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தஸ்லீமா, மாவட்ட பொதுச்செயலாளர் சாயிரா பானு, வடசென்னை மாவட்ட செயலாளர் சாய்னாஸ் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் வடசென்னை மாவட்ட தலைவர் கதிஜா பீவி,உட்பட பலர் கலந்து கொண்டனர்.